enathu paarvai

Meyyappan valai pathivukal.

Wednesday, March 24, 2004

ஒருபோகம்

வாளத்துல தழமண்டி பச்சையைடிச்சிருக்கோ
ஊரியாவை நிறையப் போட்டிருப்பான்போல
ஓடையில வேப்பநெழலு விழுந்த இடமெல்லாம்
பாலுபிடிக்காது.. எப்பவும் சோடைதான்
ஐய்யனார் கம்மாய் நெறஞ்சதுன்னா
பெரியகாடியை அறுத்து முடியாது
சின்னக்காடி கிணத்துத் தண்ணியைக்
குடிச்சாவது மேல வந்துரும்ல
நாத்தங்காலுல விட்டதும் நல்ல
உசரம் வந்துருக்கோ
.
.
வயலைவித்து வெகுநாளாச்சுன்னாலும்
வெளச்சல் நல்லாருக்கனும்ல

0 Comments:

Post a Comment

<< Home