enathu paarvai

Meyyappan valai pathivukal.

Saturday, May 29, 2004

செம்மொழி ஏன் ஆக்கவேண்டும்?

முந்தைய பதிவு

தமிழ் ஏன் செம்மொழி என்று தமிழரிடத்தில் பொதுவான கேள்விகள் இல்லை. அதைத் தாண்டி, தமிழ் ஒரு செம்மொழி என்று ஏற்றுக்கொண்டு தமிழை செம்மொழியாக அறிவித்தாலென்ன ÀÂý? அப்பொழுது மட்டும் புதிதாக் என்ன ஆகிவிடப்போகிறது என்ற கேள்விகள் தான் நம்மிடையே இருக்கிறது. தமிழைச் செம்மொழி ஆக்கச்சொல்லி நடக்கும் விவாதங்களும் போராட்டங்களும் 1800களின் பிற்பகுதியிலேயே ஆரம்பமாகிவிட்டது என்று தெரிகிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்தப் போராட்டங்களைப் பற்றி விரிவாக நமக்குத் தெரியவராமல் இருப்பது நம் துற்பேறு.

நடுவண் அரசு சமஸ்கிருதம் பாரசீகம், அரபி ஆகியமொழிகள் செம்மொழி அந்தஸ்து அளித்திருக்கிறது. பாலி, பிராகிருதம் இரண்டிற்கும் சமீபத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டதாகப் படித்தது நினைவிருக்கிறது. ஆனால் உறுதிசெய்ய இயலவில்லை. (அந்த மூன்று மொழிகளையும் செம்மொழியாக அறிவித்ததும் அன்றைய ஆங்கிலேய
அரசாங்கம்). தொண்மை, மொழிவளம், இலக்கியம், வேர்சொற்கள் போன்றவற்றின் அடிப்படையில் அந்த மொழிகளுக்கு தமிழும் இணையானது என்ற கருத்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைக்கிறேன். செம்மொழித் தகுதியால் அந்த மொழிகளுக்கு அளித்துவரும் நிதிப்பட்டியலை போன பதிவில் குறிப்பிட்டிருந்தேன். (அதுபற்றி மேலும் தகவல் பின்னே).

வாழும் மொழியான தமிழின்று அரசு சாரா நிறுவனங்களின், தனிநபர்களின் முயற்சியில் வளர்ச்சி கண்டுவருகிறது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் ,கலைச்சொல்லாக்கம் போன்ற துறைகளில் போகவேண்டிய தூரம்நிறைய இருந்தாலும், வந்திருக்கும் தூரமும் நல்லமுறையில் தான் இருக்கிறது. ஆனால் மொழியாராய்ச்சி, மொழிவளர்ச்சி,
பன்மொழிமாற்ற அகராதி, பழைய ஓலைச்சுவடிகளை, இதுவரை பதிப்பிக்கப் படாத, அல்லது மறுபதிப்பு காணாத பழைய புத்தகங்களைப் பதிப்பித்தல், அழிந்த நூற்களை மீட்டெடுக்க முயற்சித்தல், கல்வெட்டுக்கள், செப்பேட்டுகள் காப்பது போன்ற பல்வேறு பணிகள் தமிழுக்குச் செய்யப்பட வேண்டும். இவை தனிநபர்களாலும், அரசுசாரா நிறுவனங்களாலும் பெரிய முறையில் செய்ய இயலாது. இவற்றைச் செய்வதற்கு பொருளுதவி தவிர அரசுசார் செயற்பாடும் இருக்க வேண்டும்.

"சலுகைகளுக்குகாகவா" என்ற கேள்வியில் எனக்கு உடன்பாடில்லை. அரசு மக்களுக்குச் செய்வது சலுகையல்ல கடமை. செம்மொழியென்று அறிவித்ததனால் சமஸ்கிருதத்துக்கு என்ன செய்யப்படுகிறது என்று படிக்கிறோம். அதுபோல நம்மொழிக்கும், நமது வரிப்பணத்தில் செய்யவேண்டியது அரசின் பொறுப்பு. மற்ற இந்திய மாநிலங்களின் கவனிப்பிற்கு ஆளாவது, உலகளாவிய பல்கலைக்கழகங்களில் தமிழிருக்கை, தமிழ்த்துறை உருவாவதற்கான வாய்ப்பு போன்றவைகளும் செம்மொழி தகுதியோடு வரலாம் என்று கூறப்படுகிறது. இவையன்றி வேறென்ன வேண்டும். செம்மொழி ஆக்குவதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு. தமிழ் செம்மொழி அல்ல என்று எந்தக் காரணமாவது காட்டி நிராகரிக்க முடிகிறதா. ஏன் செய்யவில்லை. கோடிகோடியாய் சமஸ்கிருதத்துக்கு அளிப்பது குறைந்து போய்விடும் என்றுதானே?

செம்மொழி ஏன் ஆக்கவேண்டும்? - நிதிக்கும், நிதியின் மூலம் நடத்தப்படும் ஆக்கபூர்வமான செயல்களுக்கும், தகுதியினால் ஏற்படும் கவணிப்பிற்கும். போன பதிவில் இருந்த பட்டியல் 1978க் ஆண்டிற்கானது. எழுபதுகளில் எழுதப்பட்ட ஆண்டறிக்கைகளில் அங்கங்கே சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், பழந்தமிழ் என்று
சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் வரவர வெறும் சமஸ்கிருதம் மட்டும் என்ற நிலைக்கு ஆகிவிட்டது. 2001-02 ஆண்டிற்கான மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்தின் ஆண்டறிக்கையைத் தேடிப்பிடித்துப் படித்தேன். ஹிந்தி, சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு கோடிகள் செலவளித்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

- "சமஸ்கிருத மேம்பாடு" என்பதன் கீழ் மட்டும் 2001-02ல் ரூ1050 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது
- "சமஸ்கிருத பயிற்சி மேம்பாட்டிற்கு நூறு சதவீத மானியம்
- வேத விற்பன்னர்களை கௌரவிப்பதற்கும், சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு உதவித்தொகை அளிப்பதற்கும் மானியம்
- வருடத்திற்கு 15 சமஸ்கிருத, 3 பாரசீக, அராபிய, தலாஒரு பாலி, பிராகிருத் அறிஞருக்கு வருடத்திற்கு ரூ50,000/- அவரது வாழ்நாள் முழுவதிற்கும்

இப்படிச் செலவிடும் நிதியை நமக்கும் வாங்கி நம்மொழியையும் செழிக்கச் செய்வது தான் அரசியல்வாதிகளின் கடமை. அதைக் கேட்டுப் போராடவேண்டுமே தவிர கேட்கிறவனை குறைசொல்ல முடியாது. திராவிட கட்சிகள் இதனைக் காட்டியே ஒட்டுகேட்டுவருகிறார்கள் என்று கூறுவதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. அன்றே
ஆக்கிவிட்டிருந்தால் ஏன் இவ்வளவு நாள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தராமல் இழுத்தடித்து ஏன் இன்னும் அதனை ஒரு பிரச்சனையாக வைத்திருக்கிறார்கள். இதுபற்றி குரல் கூடக் கொடுக்காத தேசிய காட்சிகளை, காங்கிரஸ், பிஜேபிக்காரர்களை அல்லவா நாம் திட்டிக் கேட்கவேண்டும்.

கூகிள் மூலம் தகவல் திரட்டிய சுட்டிகள்:
2001-02 மனிதவள மேம்பாட்டுத்துறை ஆண்டறிக்கை
மனிதவளமேம்பாட்டுத்துறையின் மொழிகள் பிரிவு
செம்மொழியாக்குங்கள் - வாஜ்பேயி - தமிழறிஞர்கள் சந்திப்பு
தீராநதி: தமிழ் ஏன் செம்மொழியாக்கப்பட வேண்டும் - மணைவை முஸ்தபா

0 Comments:

Post a Comment

<< Home