இளங்கதிரே வருக!!!
என் அன்பு சுஜாவிற்கும் எனக்கும் இது இன்னொரு நாள் அல்ல. நாங்கள் கைகோர்த்து நடந்து வந்த சின்ன இரட்டையடிப் பாதையோரச் செடிகளின் பூக்களும், தளிர்களும், விடியலின் இளமஞ்சள் நிற கதிரொளி பட்டுத் தகதகக்கிறது. கைகளில் அசையும் இந்த இளந்தளிர், எங்களது கண்களில்
மகிழ்ச்சியையும், பூரிப்பையும், ஆனந்தத்தையும் நிறைக்கிறது. எழுப்பும் சிறுகுரலில் அனைத்துப் புலன்களும் அளவிடமுடியாத ஆனந்தத்தில் திளைக்கின்றன. மனம் உவகையில் நிரம்பித் தளும்புகிறது. இந்த அதிகாலை கதிரவனின் ஒளி எங்களுக்கு வரப்போகும் நாட்கள் குறித்த நம்பிக்கையையும், கடந்து வந்த நாட்கள் குறித்த உவப்பையும், இந்த நிமிடத்திற்கான சிறகையும் அளிக்கிறது.
வீடும் மருத்துவமனையும், இரவும் பகலும், களைப்பும், களிப்புமாக கடந்த இந்த சில தினங்கள் கனவில்லை என்று மெதுவாக கண்ணைத் திறந்துமூடித் திறந்தபடி கொஞ்சம் புன்னகையையும், சிறிது பாலையும் உதட்டோ ரத்தில் வழியவிடுகிறது..
நண்பர்களே, எங்களது இனிய மகன் பிறந்த செய்தியை தெரிவிப்பதில் மிக்க மகிழ்வடைகிறோம். ஜூன் 19ம் இரவு பிறந்த அவனுக்கு "கதிர் மெய்யப்பன்" என்று பெயரிட்டிருக்கிறோம். கதிர் 6 பவுண்டு 7 அவுன்ஸ் மாசறுபொன்னாக வந்தான் :-). மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு இன்று வந்த கதிர், தற்பொழுது தூங்கிக்கொண்டிருக்கிறான்... நாங்கள் கனவுகண்டுகொண்டிருக்கிறோம் :-).
கதிர் மெய்யப்பன்
புதிய அப்பா: மெய்யப்பன்.
புதிய அம்மா: சுஜா
பதவி வழங்கியவர்: கதிர்
நாள்: ஜூன் 19, மாலை 6:56.
மகிழ்ச்சியையும், பூரிப்பையும், ஆனந்தத்தையும் நிறைக்கிறது. எழுப்பும் சிறுகுரலில் அனைத்துப் புலன்களும் அளவிடமுடியாத ஆனந்தத்தில் திளைக்கின்றன. மனம் உவகையில் நிரம்பித் தளும்புகிறது. இந்த அதிகாலை கதிரவனின் ஒளி எங்களுக்கு வரப்போகும் நாட்கள் குறித்த நம்பிக்கையையும், கடந்து வந்த நாட்கள் குறித்த உவப்பையும், இந்த நிமிடத்திற்கான சிறகையும் அளிக்கிறது.
வீடும் மருத்துவமனையும், இரவும் பகலும், களைப்பும், களிப்புமாக கடந்த இந்த சில தினங்கள் கனவில்லை என்று மெதுவாக கண்ணைத் திறந்துமூடித் திறந்தபடி கொஞ்சம் புன்னகையையும், சிறிது பாலையும் உதட்டோ ரத்தில் வழியவிடுகிறது..
நண்பர்களே, எங்களது இனிய மகன் பிறந்த செய்தியை தெரிவிப்பதில் மிக்க மகிழ்வடைகிறோம். ஜூன் 19ம் இரவு பிறந்த அவனுக்கு "கதிர் மெய்யப்பன்" என்று பெயரிட்டிருக்கிறோம். கதிர் 6 பவுண்டு 7 அவுன்ஸ் மாசறுபொன்னாக வந்தான் :-). மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு இன்று வந்த கதிர், தற்பொழுது தூங்கிக்கொண்டிருக்கிறான்... நாங்கள் கனவுகண்டுகொண்டிருக்கிறோம் :-).

கதிர் மெய்யப்பன்
புதிய அப்பா: மெய்யப்பன்.
புதிய அம்மா: சுஜா
பதவி வழங்கியவர்: கதிர்
நாள்: ஜூன் 19, மாலை 6:56.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.