enathu paarvai

Meyyappan valai pathivukal.

Monday, October 11, 2004

குழந்தையோடு வளர்தல்

பல நாட்களாக இந்தப்பக்கம் வரவில்லை. இணையத்தில் வருவதைத் தவிர ஒன்றும் புதிதாகப் படிக்கவில்லை. விரும்பிய படங்கள் என்று எதையும் பார்க்கவில்லை. நினைத்த முக்கிய காரியங்கள் பலவற்றை முடிக்கவில்லை. ஆனால் வாழ்க்கை மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கல்லரளி மரத்தின் அழகிய பூவொன்று காற்றடிக்காத ஒரு பொழுதில் கிளையிலிருந்து உதிர்ந்து மெதுவாகச் சுற்றிச் சுற்றி காற்றில் அலைந்து இறங்குவது போல சிறு உதட்டிலிருந்து எழும் ங்குஊ, ங்குஊ என்ற மெல்லிய ஓசையோ, ஒரு சின்னப் புன்னைகையோ, தலையைத் தூக்கி மேலே சுற்றுமுற்றும் பார்த்து களைப்பாகிப் போன ஒரு கணத்தில் தொப்பென்று தோளில் சாய்ந்து கொள்ளும் அந்த சின்னஞ்சிறு உடலின் கதகதப்போ வீட்டின் சூழலையே எவ்வளவு இனிமையாக மாற்றி விடுகிறது! நாளும் நேரமும் போதவில்லை. அந்தச் சிறு கண்களின் சுரக்கும் அன்பும், ஆர்வமும் பருகித் திளைக்க இந்த நாட்கள் போதவேயில்லை!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.