enathu paarvai

Meyyappan valai pathivukal.

Thursday, August 12, 2004

அறங்கூவி விற்றல்

நல்லான் மேலான் நானிலத்தில்
வல்லான் இல்லானிடர் துடைப்பானெனத்
திக்கெலாஞ் சொல்லித் தன்துதிபாடிக்கூடிப்
பின்னொருநாள் புறங்காலால் மிதித்துச்
சிதைத்தபின் சிரிப்புடனே
நறுக்கிய முலைகளின்
நடுநிலைமைக் கணக்கை
நல்லோரெலாங் கூடி நிர்ணயம் செய்திடுவர்.
அறநிதங்கூவி வித்திடுமிவர்
நிறங்கலையுமொரு நிமிடத்தில்
திமிறித் தலைகாட்டும் நாக்கு
குருதிநக்கிய சுவையுரைக்கும்.
குதறிக்கடித்தைக் கதறியடித்ததைக்
களிப்பாய்க் கிசுகிசுக்கும்.

தேசம்காத்திடுமிவர் நேசமனத்தினை
திறம்வியந்து செயல்மறந்து போற்றுதுமே.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.